ஞாயிறு, மார்ச் 25, 2012

தமிழரின் பழங்கால எழுத்து

கூப்பிடும் தூரத்திலுள்ளவர்களிடம் கருத்துப்பரிமாற்றம் செய்ய மொழி தேவை. நிலம், வெளி மற்றும் காலத்தினால் தொலைவுபடுத்தப்பட்டவர்களின் கருத்துப்பரிமாற்றத்திற்கு எழுத்து தேவை. எழுத்துக்கள் கூறும் வரலாறு மனிதர்களைப் பற்றி தவறான கருத்துக்களைக் கூறலாம். ஆனால் மொழியைப் பற்றி உண்மையை மட்டும்தான் கூறமுடியும்.

இந்த எழுத்தைப் பதிவுசெய்வதற்கு ஊடகம் தேவை. இதற்கு பழங்காலத் தமிழர்கள் ஓலைச்சுவடிகளைப் பயன்படுத்தினார்களென்று நாமரிவோம். இந்த ஓலைச்சுவடிகள் எப்படித் தயாரிக்கப்பட்டன எப்படிப் பதப்படித்தப்பட்டன எப்படி எழுதுவது போன்ற சுவையானத் தகவல்களைப் பின்வரும் வீடியோ இணைப்பில் கண்டறிந்து கொள்ளுங்கள்.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=p-Rnk-_SNY0#!

எனது முதல் பதிவில் நகலெடுப்பது எவ்வளவு கடினமானதென்று எழுதியிருந்தேன். அதைப்பற்றியும் மேற்கண்ட வீடியோவில் தெரிந்து கொள்ளலாம்.

அகழ்வாராய்ச்சிகளின் மூலம் கண்டெடுக்கும் வரலாற்றுப் பதிவுகள் பல்லாயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் தமிழ் மொழியின் வளர்ச்சியையும் முதிர்ச்சியையும் எடுத்துக்காட்டுகின்றன. இன்று நம் எண்ணங்களுக்கு எழுத்துவடிவம் கொடுக்க கடைக்குச் சென்று இரண்டு ரூபாய்க்கு ஒரு காகிதமும் ஒரு பென்சிலும் வாங்கி எழுத ஆரம்பித்துவிடலாம். ஆனால் ஐந்தாயிரமாண்டுகளுக்கு முன்பு இவ்வளவு சுலபமா என்று தெரியவில்லை.

மொழி அத்தியாவசியமாக இருந்த அளவுக்கு எழுத்து அத்தியாவசியமில்லை. எழுதத் தெரியாமலிருந்துவிடலாம் ஆனால் மொழி தெரியாமலிருக்கவியலாது. எழுதுவதே ஆடம்பரமென்றால் இலக்கியத்தை எங்கு சேர்ப்பது? ஆனால் இலக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் சங்கங்கள் நடத்தியிருக்கிறார்களென்றால் தமிழர் நாகரீகம் மிகவும் மூதிர்ச்சியடைந்திருந்திருக்க வேண்டும்.

ம்ம்ம்.... இப்படிப் பழைய கதைகளைப் பேசினால் மட்டும் போதாது. புதிய சாதனைகள் பல படைக்க வேண்டுமென்றுதானே சிந்திக்கிறீர்கள். சரி சரி இத்தோடு முடித்துக் கொள்கிறேன் இன்றைய மொக்கையை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக